
முல்லைத்தீவு வட்டுவாகலில் சிங்கள குடியேற்றமும், முளைத்துள்ள புத்தவிகாரையும்!
விசுவமடுவில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
வெசாக் பந்தலை மாடு சேதமாக்கியதற்காக விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பரந்தனில் சொத்துக்களை அபகரிக்க கோத்தபாயவினால் கொல்லப்பட்ட கனடா தமிழர்!
வன்னி இறுதிப்போரில் காணாமல் போன 1 46 679 தமிழர்கள் எங்கே?
இலங்வைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு மேற்கொண்டது இனப்படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவரும் நிலையில், வன்னிப் போர்களத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 1 46 679 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு, சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது
நிமலராஜனை கொன்றவர் உட்பட 200க்கும் மேற்பட்ட போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவில்
வெசாக் பந்தலை மாடு சேதமாக்கியதால் சிறுவன் மீது சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்
முல்லைத்தீவின் விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இராணுவத் தினரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவர் படுகாய மடைந்துள்ளான்.
பரந்தனில் கொல்லப்பட்டவர் 13 கடைகளுக்கு சொந்தக்காரர்!
பரந்தன் குமரபுரம் பகுதியில் கொல்லப்பட்ட 53வயதுடைய அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 13 கடைகளுக்கு சொந்தக்காரர் என்றும் 50ஏக்கருக்கு மேற்பட்;டகாணிக்கு சொந்தகாரர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சொத்துக்கள் இவரின் தந்தையுடையது என்றும் கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த இவர் யுத்தம் முடிவடைந்த பின் பரந்தனுக்கு வந்து தமது கடைகளை மீட்டு வாடகைக்கு கொடுத்திருந்தார். 11கடைகளை வாடகைக்கு கொடுத்திருந்தார் என்றும் இரு கடைகள் இராணுவத்தினரிடம் இருப்பதாகவும் அதனையும் இராணுவத்தினரிடமிருந்து பெறுவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார் என்றும் வன்னியில் உள்ள தினக்கதிர் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள காணி தொடர்பாக யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்றும் அந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் அவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மகிந்தவின் மகன் நாபல்ராசபக்ச கிளிநொச்சியில் நிற்கும் போது இக்கொலை நடந்துள்ளது.
More Articles...
- போர் முடிந்த போதும் அச்சுறுத்தல் நீங்கவில்லை- இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!
- உலக ஊடக சுதந்திர தினம் இன்று- 161 ஊடகவியலாளர்கள் சிறைக்குள்
- மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுங்கள்- மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்!
- பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்: நல்லை ஆதின குருமுதல்வர்
Page 1 of 4


